NFPE

Saturday 30 December 2017



திருவரங்கம் NFPE - ன் முன்னாள் கோட்டத்தலைவரும், செயல் தலைவருமாகிய தோழர் K.கதிர்வேல் SPM, Srirangam North அவர்கள் இன்று இலாக்காவில்  இருந்து  பணி ஓய்வு பெறுகிறார்.  அவரது பணி ஓய்வு காலம் எல்லா வகையிலும் சிறந்து விளங்க திருவரங்கம் NFPE - ன் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.  நாளை 31.12.2017 அன்று காட்டுப்புத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் மதியம் நடைபெறும் ஒரு சிறிய  விருந்தில் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 

NFPE, SRIRANGAM 

Wednesday 29 November 2017

முன்னாள் தமிழ் மாநிலத்தலைவர் தோழர் P. மோகன் அவர்களின் பணி ஓய்வு காலம் சிறப்பாக அமைய திருவரங்கம் கோட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.......


NFPE, Srirangam

அஞ்சல் துறையில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளின் தீர்வினை வலியுறுத்தி NFPE சம்மேளனத்தின் அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்!!!


   நமது அஞ்சல் துறையில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளின் தீர்வினை வலியுறுத்தி NFPE சம்மேளனத்தின் அறைகூவலின்படி ஆர்ப்பாட்டம்.

கோரிக்கைகள் ...

(1 ) திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான GDS ஊதியக் கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை விரைவில் அமல்படுத்திடுக.

(2 ) CSI மற்றும் RICT அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்துகொடு - புதிய திட்டங்களின் பெயரில் இலக்கை நிர்ணயித்து ஊழியர்களை துன்புறுத்தாதே.

(3) சேமிப்பு கணக்குகளை வங்கிகளுக்கு தாரைவார்ப்பதை நிறுத்திடுக.

(4) புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திடுக.

(5) APS அஞ்சலகங்களை மூடுவதை நிறுத்திடுக.

(6) அஞ்சலக சேவையில் தனியாரை அனுமதிக்காதே.

(7) ஓய்வு பெற்ற GDS ஊழியர்களுக்கும் SDBS திட்டத்தின்படி ஓய்வு பலன்களை வழங்கிடுக.

(8) அஞ்சலக வேலைநாட்களை வாரம் ஐந்து நாட்களாக்கி எல்லா சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவித்துடுக.

(9) அனைத்து காலியிடங்களையும் GDS பதவி உள்பட நிரப்பிடுக.

  உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்ட அலுவலகம், திருவரங்கம் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.








போராட்ட வாழ்த்துக்களுடன்.....

    T. தமிழ்செல்வன்          
    கோட்டச் செயலர் P3, 

    G. ஸ்ரீனிவாசன்
    கோட்டச் செயலர் P4, 

    R. விஷ்ணுதேவன் 
     கோட்டச்செயளர் NFPE GDS.

    திருவரங்கக்கோட்டம்.

Tuesday 28 November 2017

  38 - வது தமிழ் மாநில மாநாடு செங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள K.R.G. திருமண மண்டபத்தில் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.  மொத்தம் உள்ள 146 சார்பாளர்களில் 138 சார்பாளர்களும்,  500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர். மாநாட்டின் இரண்டாவது நாள் மகிளா கமிட்டியின் தோழியர் ஏன்ஜெல் சத்தியநாதன், தோழியர் மணிமேகலை ஆகியோரின் தலைமையில் கருத்தரங்கம் மிக அருமையாக களைகட்டியது.

  நமது கோட்டத்தில் இருந்து மூன்று சார்பாளர்களும், பதினைந்து பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு மாநாட்டைச் சிறப்பித்தனர்.  மாநாட்டில் நடந்த பொருளாய்வு கூட்டத்தில் திருவரங்க கோட்டத்தலைவர் தோழர் K. ராஜு, கோட்டச்செயலர் தோழர் T. தமிழ்செல்வன் மற்றும் நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் ஆகியோர் பங்குக்கொண்டு தங்களுடைய கருத்துக்களை மிக ஆழமாக மாநாட்டில் பதிவுச்செய்தனர்.

  தோழர் C. சசிகுமார் மாநிலச்சங்க நிர்வாகியாக தன்னுடைய கருத்துக்களை மாநாட்டிலே பதிவுச்செய்தார்.





  
செங்கல்பட்டில் நடைபெற்ற NFPE அஞ்சல் மூன்றின் 38 வது தமிழ் மாநில மாநாட்டில் கீழ்காணும் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

மாநிலத்தலைவர்:
தோழர் : M.செல்வகிருஷ்ணன் HSG -1,
                 சங்கரன்கோவில் HO,
                கோவில்பட்டி கோட்டம்

துணைத்தலைவர்கள் :
தோழர்கள்:
N.சுப்ரமணியன், PM 
மேட்டுப்பாளையம் HO
K. மருதநாயகம், PA
திருச்சிராப்பள்ளி  HO
S. அய்யம் பெருமாள்
கோட்டார் SO,
 நாகர்கோயில் கோட்டம்

மாநிலச்செயலர் :
தோழர்: J. ராமமூர்த்தி, APM
T. நகர்  HO, சென்னை.

மாநில உதவிச்செயலர்கள்: 
தோழர்கள்:
R.   குமார் , PA, 
புதுக்கோட்டை HO
S.வீரன், Marketing Executive, 
வேலூர் HO
A. ராஜேந்திரன், PA,
திருப்பூர் HO
N. சிவசண்முகம், PA
கோயம்புத்தூர் HO
G. ராமமூர்த்தி, Marketing Executive
செங்கல்பட்டு HO

மாநில நிதிச்செயலர்:
தோழர்: A. வீரமணி, PA 
அண்ணாரோடு HO

மாநில உதவி நிதிச்செயலர்:
தோழர்: N. கோபால் , SPM, 
காஞ்சிபுரம் கேட்செரி

மாநில அமைப்புச்செயலர்கள்:
தோழர்கள்:
C. சசிகுமார், System Manager,
ஸ்ரீரங்கம் HO
C. மோகன், PA, 
அம்பத்தூர், தாம்பரம்   
 K. சுப்ரமணியன், SPM,
கலெக்டரேட்,
திண்டுக்கல் ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் திருவரங்கக்கோட்டத்தின் வாழ்த்துக்கள்.
  இந்த 38 - வது தமிழ் மாநில மாநாட்டில் முதன்முறையாக 9 நபர்கள் கொண்ட Technology Wing என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
  38 - வது மாநில மாநாட்டை மிகவும் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய செங்கல்பட்டு தோழர் G.ராமமூர்த்தி, தோழர் ராஜ்குமார் அவர்களுக்கும், அவர்களின் அணிக்கும் திருவரங்கம் கோட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    

Tuesday 21 November 2017

Monthly meeting with SPOs

Dear Comrades,


  The Monthly meeting with SPOs will be held on 29.11.2017 1400 hrs. Comrades are requested to send the subjects to Secretary immediately.

T. Tamilselvan (9965428382)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division

Thursday 19 October 2017

Monthly meeting with SPOs

Dear Comrades,


  The Monthly meeting with SPOs will be held on 27.10.2017 1400 hrs. Comrades are requested to send the subjects to Secretary immediately.

T. Tamilselvan (9965428382)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division

Thursday 5 October 2017

VERIFICATION OF MEMBERSHIP FOR RECOGNITION OF SERVICE ASSOCIATIONS REPRESENTING GRAMIN DAK SEVAKS (GDS) (EARLIER CALLED EXTRA DEPARTMENTAL AGENTS) UNDER EXTRA DEPARTMENTAL AGENTS (RECOGNITION OF ASSOCIATION) RULES-1995

Monday 25 September 2017

Monthly meeting with SPOs


Dear Comrades,

  The Monthly meeting with SPOs will be held on 27.09.2017 1400 hrs. Comrades are requested to send the subjects to Secretary immediately.

T. Tamilselvan (9965428382)
Divisional Secretary
AIPEU Group 'C'
Srirangam Division

Sunday 24 September 2017

Media Report : Central pay hike in January

All eyes are on the meeting of the National Anomaly Committee which will hike the basic pay from what the 7th Pay Commission had recommended. The meeting is set to be held in the month of October. After the meeting a report would be prepared. However for the basic minimum pay hike to be effective, the committee would have to give a majority vote.

Latest updates on NAC meeting Sources now confirm that the meeting will be held in October. Earlier it was slated for the last week of September, but since there were some pressing and pending issues, the meeting will now be held in October. Sources also say that the meeting is likely to be held anytime before October 15.

While the Finance Minister Arun Jaitley is keen on a hike in basic minimum pay, he would however have to first approve a report to be submitted by the NAC. There is a clear indication that the NAC would not go against the wishes of the Finance Minister. When the meeting is held in October, the NAC would vote in majority for a hike in basic minimum pay.

Once the meeting is held, the National Anomaly Committee would submit its report to Finance Minister Arun Jaitley. The report will be submitted in December to Jaitley, sources indicate. Once the report is submitted the Finance Minister would clear the proposal paving the way for a hike in basic minimum salary for the 50 lakh Central Government employees who have been waiting for good news on the same.

The 7th Pay Commission had suggested the basic pay to be at Rs 18,000. However the CG employees had said it was not enough and they could not make two ends meet. Now the latest updates suggest that the government would tinker with the fitment factor which would go from 2.57 to 3 times. This would mean that the basic pay would rise from Rs 18,000 to Rs 21,000. 

Source : OneIndia News

F&A CSI User Manual - Simplified

Please find F & A CSI User Manual Prepared by Me for our colleague to help in work into CSI platform..
Name - Kumod Waikos
Profession- System Administrator
Place- Chalisgaon HO-424101






Courtesy : POTools

Monday 11 September 2017

GDS COMMITTEE REPORT STATUS



Today on date 11.09.2017 in the forenoon I met the higher officers of the Department and enquired about the status of GDS committee. They told that some queries were raised by the Finance Ministry. Reply on those queries have been sent and it is in final stage and may be received in Directorate very soon.

After receipt from Finance Ministry implementation process will be started. The officers of Department have told that they will not make any delay in implementation of GDS Committee Report after receiving approval from Finance Ministry.


(R. N. Parashar)
Secretary General

NFPE

Sunday 3 September 2017

Happy Onam


  இன்று 03.09.2017 மணவிழா கண்ட பாக்கியலெக்ஷ்மி, OA, Divisional Office, அழகுமணி தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.




NFPE, Srirangam

Wednesday 30 August 2017

தமிழகத்தில் எழுத்தர் பகுதியில் கேடர் சீரமைப்பும் தற்போதைய நிலையும்

அன்புத் தோழர்களுக்கு, வணக்கம்.
கடந்த 2.8.2017 அன்று புது டெல்லியில் நடை பெற்ற கேடர் சீரமைப்பு குறித்து பரிசீலிக்க அமைக்கப் பட்ட கமிட்டியின் கூட்டத்தில் ஊழியர் தரப்பில், நம்முடைய அகில இந்திய சங்கத்தின் சார்பில் நாம் கலந்து கொண்டதும் அதில் சரியான முடிவுகள் எடுக்கப்படாததும் உங்களுக்குத் தெரிவித்தி ருந்தோம்.
தற்போது எதிர் வரும் 1.9.2017 அன்று அந்த கமிட்டியின் அதிகாரிகள் குழு இறுதி முடிவுகள் எடுக்க புது டெல்லியில் கூட உள்ள நிலையில் நம்முடைய கருத்துக்களை மீண்டும் எடுத்துரைக்க முடிவெடுத்து இன்று நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் இந்தக் கமிட்டியின் உறுப்பினரும் நம்முடைய PMG, MM& BD யாக இருக்கின்ற திரு.J.T. வெங்கடேஸ்வரலு அவர்களை சந்தித்து நம்முடைய கோரிக்கை மனுவினைக் கொடுத்து பேசினோம். அதன்மீது அவர் அளித்த பதில் .
1. கமிட்டியின் பரிந்துரை என்பது கிட்டத்தட்ட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
2. இதில் ஏற்கனவே அனைத்து காசாளர் பதவியும் அடிப்படை விதிகளின்படி எழுத்தருக்கானது என்று பரிந்துரைக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் மட்டும் அனைத்து காசாளர் பதவிகளும் LSG யாக IDENTIFY செய்யப்பட்டுள்ளன.
4. இப்படியாக மொத்தம் 694 காசாளர் பதவிகள் LSG யாக அடையாளம் காணப்பட்டு அவற்றில் பெரும்பகுதி எண்ணிக்கையில் தமிழகத்தில் நிரப்பப்பட்டுள்ளன.
5. ஏற்கனவே இரண்டாவது பட்டியலில் உள்ள ஊழியர்களுக்கு பெருநகர கோட்டங்களில் இடம் இல்லாத காரணத்தால் DECLINE செய்த பதவிகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 1200 பதவிகள் வெளிக் கோட்டங்களில் நிரப்ப வேண்டியுள்ளது.
6. இந்த நிலையில், TREASURY மாற்றப்பட்டால் மேலும் 694 ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் உள்ளது என்பதை நம்முடைய மாநிலச் சங்கத்தின் சார்பில் சுட்டிக் காட்டியதன் பேரில் தமிழகத்திற்கு மட்டும் இதில் விலக்கு அளிக்க பரிந்துரைப்பதாக கமிட்டியில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
7. இது தவிர ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட விஷயங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதில் பல விஷயங்களில் நமக்கு உடன்பாடில்லை என்பதை சுட்டிக் காட்டியதால், இது குறித்த கோரிக்கை மனுவினை நமது பொதுச் செயலர் மூலம் கமிட்டியின் CHAIRMAN அவர்களுக்கு அளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இதன்படியே தலைவர்கள் KVS மற்றும் M.கிருஷ்ணன் அவர்களின் வழி காட்டுதலின்படி நம்முடைய மாதிரி கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு நம்முடைய பொதுச் செயலர் தோழர். பராசர் அவர்களின் பார்வைக்கும் அவர்களின் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அவரும் இதன் மீது தன்னுடைய முடிவுகளை எடுத்து கமிட்டி தலைவருக்கும் நம்முடைய இலாக்கா முதல்வருக்கும் அனுப்புவதாக உறுதி அளித்துள்ளார்கள்.
மேலும் இதன் மீது நேரில் பேசி தமிழக அஞ்சல் மூன்றின் கோரிக்கை மனுவினை அளித்திடுமாறு நம்முடைய கர்நாடகா அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். ஜானகிராம் அவர்களிடம் தொலைபேசியில் பேசி அவர்களுக்கும் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் மனுவின் நகலை அனுப்பியுள்ளோம். அதனை நாளை காலை அவர் நேரிடையாக கர்நாடகா CPMG யும் கமிட்டியின் தலைவருமான திரு. சார்லஸ் லோபோ அவர்களிடம் அளித்துப் பேச உள்ளார். மேலும்
திரு . லோபோ அவர்களுக்கும் நம்முடைய மனு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு அவரது உதவியாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர செய்திகள் :
1. தமிழகத்தில் கேடர் சீரமைப்பு திட்ட அமலாக்கத்தால் குறைக்கப்பட்ட 3358 எழுத்தர் பதவிகளின் காரணமாக (FEEDER CADRE) எழுத்தரில் காலிப் பணியிடங்கள் இல்லை என முடிவெடுக்கப்பட்டது. இதனால்
அ) 2016-17 மற்றும் 2017-18 க்கான எழுத்தர் தேர்வுகள்அறிவிக்கை செய்யப்படவில்லை
ஆ) அனைத்து விதி 38 இடமாறுதல்களும் நிறுத்தப்பட்டது.
ஆனால் நம்முடைய 23.8.2017 வேலை நிறுத்தம் காரணமாக தற்போது காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு 2016-17 மற்றும் 2017-18 க்கான அறிவிக்கை வெளியிட இலாக்கா உத்திரவிட்டுள்ளது.
இந்தக் காலியிடங்கள் என்பது சென்னை பெருநகரத்தில் மத்திய சென்னை, தென் சென்னை, வடசென்னை, அண்ணா சாலை போன்ற ஒரு சில கோட்டங்களிலும் இதர மண்டலங்களில் ஒரு சில கோட்டங்களில் மட்டுமே இருப்பதாக அறிக்கை கிடைத்துள்ளது.
ஒட்டு மொத்தமாக இரண்டு ஆண்டுகள் கணக்கில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தக் காலியிடங்கள் உள்ளன. இதர கோட்டங்களில் எழுத்தரில் உபரி காட்டப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே 2015-16 க்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட எழுத்தர்களில் பல கோட்டங்களில் பணி நியமனம் அளிக்க முடியாத நிலையும், தேர்வு பெற்ற எழுத்தர்களில் பெரும் பகுதியினருக்கு அவர்கள் கேட்காமலேயே சென்னை பெருநகரத்தில் பணி நியமனமும் கிடைக்க உள்ளது.
மேலும் நம்முடைய தொடர்ந்த அழுத்தம் காரணமாக ஏற்கனவே உத்திரவிடப்பட்டு நிலுவையில் இருந்த அனைத்து விதி 38 இட மாறுதல்களும் உடனே அமல் படுத்திட கடந்த வாரம் உத்திரவு வெளியிடப்பட்டது . அதன்படி 150 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது இடமாற்றம் பெறுகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை பெரு நகரத்தில் அதிகம் பயனடையும் கோட்டம் சென்னை மத்திய கோட்டமாக இருக்கும். விதி 38 மற்றும் புதிய பணி நியமனத்தில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட எழுத்தர்களை இந்தகோட்டம் பெற உள்ளது.
ஆனால் இரண்டாவது கட்ட கேடர் சீரமைப்பு உத்திரவு தற்போதுள்ள நிலையில் இடப்பட்டால், சென்னை பெரு நகர கோட்டங்களில் எழுத்தர்கள் SANCTIONED STRENGTH ஐ தாண்டி உபரி என அறிவிக்கப்பட்டு மீண்டும் அவர்களை இடமாற்றம் செய்திட நேரும் என்பதையும் நாம் நம்முடைய கோரிக்கை மனுவில் சுட்டிக் கட்டியுள்ளோம் என்பதனையும் இந்த இடத்தில் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.
ஒரு புறம் உயர் தொழில் நுட்பம் புகுத்தப்படும் சூழலில், மறுபுறம் ஆழிப் பேரலையாக இந்த ஆட்பற்றாக்குறை என்பது அதிகம் இருந்தும், நிரப்பிட இயலாத செயற்கையான சூழலாக நம்மை தாக்க உள்ளது என்பதும் இதனை எதிர்த்து நாம் பெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டியது என்பதும் மிகப் பெரும் உண்மையே.
இதனை முன் கூட்டியே அறிந்து முதலில் அறிவிக்கும் மாநிலச் சங்கமும், அதிகார மட்டத்திற்கும் அகில இந்திய சங்கத்திற்கும் எடுத்துச் செல்லும் முதல் மாநிலச் சங்கமும் நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று மாநிலச் சங்கமே.
விடை கிடைக்குமா ? வீதி இறங்கிப் போராட்டமா ? ஒரு மாதத்தில் தெரியவரும். நம்முடைய கோரிக்கை மனு கீழே உங்களின் பார்வைக்கு அளிக்கப்பட்டுள்ளது.