NFPE

Friday 16 May 2014

கூகுள், யாஹூவுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். இ-மெயில் அறிமுகம்!

கூகுள், யாஹூ இ-மெயிலுக்கு இணையாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய இ-மெயில் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். புதிய இ-மெயில் சேவையை வரும் சனிக்கிழமை (17ஆம் தேதி) அறிமுகப்படுத்துகிறது. இந்த இ-மெயில் சேவையை ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ‘டேட்டா இன்போசிஸ்’ ஐ.டி. நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தற்போது அதிகமாக பயன்படுத்தப்படும் யாஹூ, கூகுள், ரீடிஃப் போன்ற இ-மெயிலில் இல்லாத வசதிகள் இதில் உருவாக்கப்பட்டுள்ளதாக டேட்டா இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், ரைட்ஸ் மேனேஜ்மெண்ட் என்ற வசதியில் மெயிலை அழிப்பது, பார்வர்டு செய்வது, ரிப்ளை மற்றும் பிரிண்ட் எடுப்பதை இ-மெயில் அனுப்புவர்தான் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் நாம் விரும்பிய நேரத்தில் மெயில் சென்றடையும் வகையில் ஷெடியூல் செய்தும் அனுப்பலாம். இந்த இ-மெயில் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியும். இந்த இ-மெயிலில் சேமித்து வைக்க 1 ஜி.பி. வரை விர்ச்சுவல் ஸ்டோரேஜூம் வழங்கப்படுகிறது.
இதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் மெயில்கள் வரை அனுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இ-மெயிலை லாக் இன் செய்யும்போது, ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டியதில்லை. இதற்காக டூவல் ஆத்தென்டிகேஷன் என்ற பாதுகாப்புடன் கூடிய ஓ.டி.பி. வழங்கப்படடுள்ளது எனவும் டேட்டா இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்யும் இந்த இ-மெயிலை முதலில் பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் இணையதள இணைப்பு உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்கவும், மற்றவர்களுக்கு கட்டண முறையில் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இணையதள சேவை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் இ-மெயில் சேவைகளுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

No comments:

Post a Comment