NFPE

Monday 29 December 2014

திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம் 

28.12.2014 அன்று திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தில் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர்  தோழர் N. சுப்ரமணியன் அவர்கள் கலந்துக்கொண்டு மிக விரிவாக 7th Pay Commission மற்றும் நமது அஞ்சல் துறையின் இன்றைய  நிலை குறித்தும் மிக விரிவானதொரு சிறப்புரை ஆற்றினார். அதன்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வழக்கம் போல் நமது தோழர்கள்,தோழியர்களின் கேள்விகளுக்கு பொதுச் செயலர்  தோழர் N. சுப்ரமணியன் அவர்கள்  மிக தெளிவாக பதில் அளித்தார்கள். 

  இந்த சிறப்பு கருத்தரங்கத்திற்கு நமது கோட்டத் தலைவர்  தோழர் K. கதிர்வேல் அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர்  தோழர் C. சசிகுமார் அவர்கள் வரவேற்ப்புரை ஆற்றினார். நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற சரியாக மதியம் 3.30க்கு தொடங்கிய சிறப்பு கருத்தரங்கம் இரவு 07.30 மணிக்கு இனிதாக முடிவுற்றது.

  மிக மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு கருத்தரங்கதிற்கு திரளாக வந்து கலந்துக்கொண்ட அனைத்து தோழர்களுக்கும்,தோழியர்களுக்கும் கோட்டச் சங்கம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.


NFPE, Srirangam

No comments:

Post a Comment