NFPE

Wednesday 26 December 2012


JCA

NFPE - FNPO- GDS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு

NFPE-FNPO சம்மேளனங்கள் கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து எதிர்வரும் 28/12/2012 அன்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன் மாலை சுமார் 6.00 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

SCREENING COMMITTEE இருந்த நேரத்தில், 2005 முதல் 2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3rd காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால் ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON-ல் வைக்கப்பட்டு இருந்தது. இப்படி வைக்கப் பட்டிருந்த 17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி ஒழித்துக்கட்ட அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. அதில், கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப் பணியிடங்களை ஒழிப்பதின் மூலம் ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும் அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான போக்கினைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நாடு தழுவிய அளவில் நாம் நடத்துகிறோம். அது சமயம் அருகில் பணிபுரியும் அனைத்து தோழர்களும், தோழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  


வாழ்க NFPE !                                                   வளர்க NFPE !

      

                                                                 
NFPE, Srirangam

No comments:

Post a Comment