NFPE

Thursday 13 February 2014

தமிழகத்தில்  அஞ்சல்  மற்றும் RMS  பகுதிகளில்
 48 மணி நேர வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி

வேலை நிறுத்தத்திற்கு இரவு பகல் பாராது , கண் துஞ்சாது  பாடுபட்ட அனைத்து மாநிலச் சங்கங்களின் அனைத்து  மாநில மட்ட, கோட்ட மட்ட/ கிளை மட்ட நிர்வாகிகளுக்கும்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின்,  அஞ்சல்  RMS இணைப்புக் குழுவின் , மாநில JCA  வின் ,  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன  தமிழ் மாநில அமைப்பின்  நெஞ்சார்ந்த  நன்றி !

நமக்குக் கிடைத்த செய்திகளின் படியும் , பத்திரிகை, தொலைகாட்சி செய்திகளின் படியும்  இதுவரை  நடைபெற்ற அனைத்து வேலை நிறுத்தங்களையும் விட  இந்த வேலை நிறுத்தத்தில்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிக்கும்  நூற்றுக்கு நூறு விழுக்காடு  என , எந்தவித பேதமும் இல்லாமல் அனைத்து பகுதி ஊழியர்களும் கலந்துகொண்டது  உண்மையிலேயே   நம் தமிழ் மாநில சங்கங்களுக்கு  பெருமை !  இது மட்டற்ற மகிழ்வை  ஏற்படுத்துகிறது ! . 

இது நமது ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி ! நிச்சயம்  நம் ஒன்றுபட்ட குரலுக்கு மத்திய அரசு  பதில் சொல்லியே ஆக வேண்டும் ! கோரிக்கைகளில்  நாம் நிச்சயம்  வென்றே தீருவோம் !

மீண்டும்  அனைத்து பகுதி தோழர்களுக்கும் ,  தோழியர்களுக்கும்  எங்கள்  நெஞ்சு நிறைந்த நன்றியை காணிக்கை  ஆக்குகிறோம் !
  
நம்முடைய  மாபொதுச்  செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்களிடம்  தொலைபேசியில்  பேசும் போது  " TAMILNADU  STANDS  FIRST ! I  REALLY  APPRECIATE  THE WORK !  PLEASE  CONVEY MY CONGRATS TO ALL OUR COMRADES " என்று  மனம் திறந்த பாராட்டையும் வாழ்த்துகளையும்  தெரிவித்தார். அவருக்கும்  நம்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் ! 

No comments:

Post a Comment