NFPE

Saturday 16 August 2014

68 - வது சுதந்திர தின விழா


  15.08.2014 அன்று 68 - வது சுதந்திர தின விழாவானது திருவரங்கம் தலைமை அஞ்சலக வளாகத்தில் திருவரங்கம் தலைமை அஞ்சலக அதிகாரி திரு.திரவியராஜ் மற்றும் திரு ராமராஜு  அவர்களின் தலைமையில், துணை கண்காணிப்பாளர்கள் திருமதி சந்திரபிரபா மற்றும் திரு காசிவிஸ்வநாதன் ஆகியோரின் முன்னிலையில் நமது கோட்டத்தில் முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்ற மூத்த தோழர் திரு R. பாலசுப்ரமணியன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திருவரங்கம் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.





துறையூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் துறையூர் கிழக்கு துணை கண்காணிப்பாளர் திரு. முருகேசன் அவர்களின் தலைமையில், துறையூர் மேற்கு உட்கோட்ட ஆய்வாளர் திரு. குருசங்கர் அவர்களின் முன்னிலையில் துறையூர் தலைமை அஞ்சலக அதிகாரி திரு இராஜேந்திரன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.  அதன் பின் துறையூர் தலைமை அஞ்சலகத்தில் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் 70 - க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் அனைவராலும் நடப்பட்டன. துறையூர் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.










பெரம்பலூர் தலைமை அஞ்சலக வளாகத்தில் தலைமை அஞ்சலக அதிகாரி பொறுப்பில் இருக்கும் திரு சுந்தரராஜன் Accountant அவர்கள் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.  பெரம்பலூர் தலைமை அஞ்சலக ஊழியர்கள் பெரும்பான்மையாக கலந்துக்கொண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.

காட்டுபுத்தூர் துணை அஞ்சல் நிலையத்தில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சி துணை அஞ்சலக அதிகாரி திரு க.கதிர்வேல் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.



NFPE, Srirangam



No comments:

Post a Comment