NFPE

Monday 15 February 2016

CONFEDERATION NATIONAL EXECUTIVE COMMITTEE/ NJCA / PJCA DECISIONS


கடந்த 12.02.2016  அன்று புது டெல்லியில் நடைபெற்ற மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனத்தின்  தேசிய செயற்குழு  கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முக்கி யமான   முடிவுகள்  குறித்த  மகா    சம்மேளனத்தின்    பொதுச்    செயலரின் சுற்றறிக்கையை   கீழே  இணைப்பில்  காணவும்.


இதன்படி முக்கியமாக 

1.  11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் 
     அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் .

2.  11.3.2016 அன்று புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மிகப் பெரிய மத்திய 
     அரசு ஊழியர்  பேரணி நடத்துதல்.

3.  மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மாநிலத் தலை 
    நகரங்களிலும்  மிகப் பெரும் ஊழியர் பேரணி நடத்துதல். இதில் NJCA 
    அகில இந்திய   தலைவர்களை கலந்து கொள்ளச் செய்தல்.

4.  29.3.2016 அன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் "SOLIDARITY  DAY " 
     கடைபிடித்தல் .

5.  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அனைத்து நிர்வாகிகள்/ 
     மாவட்ட  நிர்வாகிகள்  மற்றும் அனைத்து சங்கங்களின்  நிர்வாகிகள் 
     அடங்கிய கூட்டம்  அனைத்து மாநிலத்  தலைநகரங்களிலும்  ஏற்பாடு 
     செய்தல் . அதில் மகா  சம்மேளனத்தின் அகில இந்திய நிர்வாகிகள் 
     கலந்துகொண்டு  வேலை நிறுத்த ஏற்பாடுகளை ஆய்வு செய்தல். 
     இது தமிழகத்தில் 25.3.2016 அன்று நடைபெறும். இதில் தோழர்கள் . M . 
     கிருஷ்ணன்,  மணி ஆச்சாரி, துரைபாண்டியன்,  வெங்கடசுப்ரமணியன் 
     ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

6.  NJCA  தலைவர்கள்  அந்தந்த மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சி 
     தலைமை  மற்றும்  பாராளுமன்ற / ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு 
    மத்திய அரசு ஊழியர்  கோரிக்கைகளை தீர்த்து வைத்திட உடன் 
     தலையிடுமாறு  கடிதம்  அனுப்பவேண்டும்.

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  
அகில இந்திய மாநாடு  மற்றும்  மாநில மாநாடு 

1. மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு
  எதிர்வரும் ஆகஸ்ட் 26, 27 மற்றும் 28 தேதிகளில்  தமிழகத்தில் 
   நடைபெறும்.  (இதற்கு முன்னதாக  மகா சம்மேளனத்தின்  தமிழ்  மாநில 
   மாநாடும்   நடைபெற   உள்ளது ).

2.  இந்த மாநாட்டை ஒட்டி , 27.8.2016 அன்று அரை நாள் ,  அகில இந்திய
    அளவிலான மகளிர் கருத்தரங்கம்  இதே மாநாட்டு நிகழ்வில் நடைபெற 
      உள்ளது.

3.  அகில இந்திய மாநாட்டு  சார்பாளர் மற்றும் பார்வையாளர் கட்டணம் 
     ரூ. 1000/- .  மகளிர்  கருத்தரங்கில் மட்டும் கலந்து கொள்பவர்களுக்கு 
     சார்பாளர்  கட்டணம் ரூ. 400/-.

4.  ஜூன் மாதத்தின் முதல் பகுதியில்  மகா சம்மேளனத்தின் தொழிற்சங்க 
    பயிற்சி முகாம்  உத்திரகண்ட்  மாநிலத்தின் டேராடூன்  பகுதியில் 
     நடைபெற  உள்ளது.

கடந்த   8.2.2016   அன்று   புது   டெல்லியில்   நடைபெற்ற   NJCA   கூட்டத்தின் 
முடிவுகள் அடங்கிய சுற்றறிக்கை மற்றும் கோரிக்கை மனு   கீழே  உள்ள இணைப்பில் காணவும் .



இதன்படி முக்கியமாக 

1.  11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் 
     அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் . ஆர்ப்பாட்டம் நடத்துதல்.

2.  11.3.2016 அன்று புது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மிகப் பெரிய மத்திய 
    அரசு ஊழியர்  பேரணி நடத்துதல். காபினெட் செயலரிடம் வேலை 
    நிறுத்த நோட்டீஸ்  NJCA  தலைவர்கள்  வழங்குதல்.

3.  மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு மாநிலத் தலை 
     நகரங்களிலும்  மிகப் பெரும் ஊழியர் பேரணி நடத்துதல். இதில் NJCA 
     அகில இந்திய  தலைவர்களை கலந்து  கொள்ளுதல்.

4.  29.3.2016 அன்று நாட்டின் அனைத்து பகுதிகளிலும் "SOLIDARITY  DAY " 
     கடைபிடித்தல் .

5.  காலவரையற்ற வேலை நிறுத்தம் எதிர்வரும் 11.4.2016 காலை 06.00 
      மணிமுதல்  துவக்குதல்.

6.   துறைவாரிக் கோரிக்கைகளை   பகுதி II ஆக  அந்தந்த பகுதி சங்கங்கள் 
      தங்களது  வேலை நிறுத்த நோட்டீஸ் உடன் சேர்த்து வழங்குதல்.

கடந்த 08.02.2016 அன்று புது டெல்லியில் நடைபெற்ற POSTAL  JCA   (NFPE & FNPO )  கூட்டத்தின்   முடிவுகள் ஏற்கனவே நம் வலைத்தளத்தில் பிரசுரித் துள்ளோம்.  இருப்பினும் அதன் முக்கிய அம்சங்கள் கீழே  தமிழில்    தரப் படுகின்றன .



1.  11.3.2016 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் 
     அனைத்து பகுதிகளிலும் வழங்குதல் . ஆர்ப்பாட்டம் நடத்துதல்.

2. அனைத்து கோட்ட அலுவலகங்கள் முன்பாக கோரிக்கைகளை
    வலியுறுத்தி  எதிர்வரும் 18.3.2016 அன்று முழு நாள் தார்ணா  போராட்டம் 
    நடத்துதல்.  ( அரை மணி நேர  ஆர்ப்பாட்டம்  அல்ல ).

3.  கோரிக்கைகளை வலியுறுத்தி CPMG  அலுவலகம் முன்பாக எதிர்வரும் 
     06.04.2016 அன்று  முழு நாள் தார்ணா  போராட்டம் நடத்துதல்.

4.  11.4.2016 காலை 06.00 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் 
     மேற்கொள்ளுதல்.

கோரிக்கைகள் :-

 1. ஏழாவது ஊதியக் குழு தொடர்பான  NJCA  மூலம் சமர்ப்பிக்கப்பட்ட 
      கோரிக்கைகளை தீர்த்து வை.

2.  அனைத்து GDS  ஊழியர்களுக்கும்  அரசு ஊழியர் அந்தஸ்து வழங்கு .
      விகிதாசார அடிப்படையில்  GDS  ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கு.

3.  கோரிக்கை மனுவில் அளிக்கப் பட்டபடி அஞ்சல் துறை ஊழியர் 
     களுக்கென்ற  உயர்த்தப் பட்ட ஊதியம்  வழங்கு.

4.  ஏழாவது ஊதியக் குழு அறிக்கை அமலாவதற்குள்  கேடர்  சீரமைப்புத் 
      திட்டத்தை  அமலாக்கு.

5. CBS/CIS  தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் உடன் தீர்த்து வை.
6.  அஞ்சல் , RMS  அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து
     காலியிடங்களையும்   சிறப்பு   தேர்வு நடத்தி உடனே  நிரப்பு.

7.   தகுதியான அனைத்து CASUAL  ஊழியர்களையும் நிரந்தரம் செய்.
     அவர்களுக்கு வழங்க வேண்டிய 1.1.2006 முதலான நிலுவைத் 
    தொகையை  உடனே  வழங்கு.

No comments:

Post a Comment