NFPE

Wednesday 24 February 2016

மாநில அளவிலான GDS ஊழியர் கருத்தரங்கம்



AIPEU GDS NFPE சங்கத்தின் மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் எதிர்வரும் 28.02.2016 அன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் பார்சல் ஆபீஸ் எதிரில் உள்ள SRMU சங்கக் கூட்ட அரங்கில் காலை 09.00 மணி தொடங்கி முழு நாள் நிகழ்வாக நடைபெற உள்ளது.
இதில் முக்கிய தலைவர்களான தோழர். M . கிருஷ்ணன், தோழர். K . ராகவேந்திரன், தோழர். K .V . ஸ்ரீதரன் , தோழர். R .N . பராசர் , தோழர். P . பாண்டுரங்கராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றிட உள்ளார்கள். GDS ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா தலைமையிலான ஊதியக்குழுவுக்கு நாம் அளிக்க வேண்டிய கோரிக்கை மனு குறித்தும், பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட உள்ள GDS ஊழியர் சங்கங்களுக்கான உறுப்பினர் சரிபார்ப்பில் நம்முடைய AIPEU GDS NFPE சங்கத்தை முதன்மை சங்கமாக ஆக்கிடுவது குறித்தும் விரிவான விவாதம் நடைபெற உள்ளது.


No comments:

Post a Comment