NFPE

Saturday 18 January 2014

48 மணி நேர வேலை நிறுத்தம் !

ஊதியக் குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 
 48 மணி நேர வேலை நிறுத்தம் !

அன்பான  NFPE  சம்மேளனத்தின் அனைத்து உறுப்புச் சங்கங்களின்  தமிழ் மாநிலச் சங்க நிர்வாகிகளே, கோட்ட/ கிளைச் செயலர்களே ! உங்கள் அனைவருக்கும் தமிழக அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக போராட்ட வணக்கங்கள் !

NFPE   மற்றும் FNPO சம்மேளனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள  பிப்ரவரி  12-13, 2014 தேதிகளில் நடைபெறவிருக்கும் 48 மணி நேர வேலை நிறுத்தம் சிறப்பாக  தமிழகத்தில் நடத்துவது குறித்து முடிவுகள் எடுத்திட , நேற்று (17.01.2014) மாலை சுமார் 06.00 மணியளவில் , தமிழகத்தின் NFPE  மற்றும் FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்கள் அடங்கிய  JCA   வின் கூட்டம்  சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது . 

கூட்டத்திற்கு தமிழக NFPE   மற்றும் FNPO சம்மேளனத்தின் அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் கன்வீனர்களான  தோழர். J .  இராமமூர்த்தி  மற்றும் தோழர். G .P.முத்துக்கிருஷ்ணன்ஆகிய இருவரும் கூட்டாக  தலைமை யேற்று நடத்தினர். 

அனைத்து  மாநிலச் செயலர்களும் விவாதத்தில் கலந்துகொண்டு தங்களை கருத்துக்களை எடுத்துரைத்தனர் . கூட்டத்தில் இறுதியாக கீழ்க் கண்ட முடிவுகள்  ஏகமனதாக எடுக்கப்பட்டன. 

1.   எதிர்வரும் 25.01.2014 சனிக்கிழமை மாலை,  சென்னை பெருநகர மண்டலம் நீங்கலாக , இதர மண்டலங்களான  திருச்சி, மதுரை, கோவை ஆகிய மண்டலத் தலைமையகங்களில்,  மண்டல அளவிலான வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்கள் நடத்துவது  என்றும்,

   அந்தந்த மண்டலங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும்  மண்டலத் தலைமையகத்தில் உள்ள கோட்டங்களின் செயலாளர்கள் JCA வாக இணைந்து ,   இந்த வேலை நிறுத்த ஆயத்தக்  கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது . இதில் கலந்துகொள்ளும்  மாநிலச் செயலர்கள்  விபரம்  வருமாறு :-

திருச்சி மண்டலம் 

தோழர்கள் 
J .  இராமமூர்த்தி , மாநிலச் செயலர் P 3, NFPE 
P . குமார், மாநிலச் செயலர், R 3, FNPO 
K . ராஜேந்திரன், மாநிலச் செயலர் ,R 4,  NFPE
R . தனராஜ், மாநிலச் செயலர், GDS , NFPE 
P . கோதண்டராமன், GDS , FNPO 

மதுரை மண்டலம் 

தோழர்கள் 
G .P . முத்துகிருஷ்ணன், மாநிலச் செயலர், P 3, FNPO 
K . சங்கரன், மாநிலச் செயலர், R 3, NFPE 
S . அப்பன்ராஜ் , மாநிலச் செயலர், NFPE , SBCO 

கோவை மண்டலம் 

தோழர்கள் 
கோபு  கோவிந்தராஜன் , மாநிலச் செயலர், P 4, NFPE 
K . குணசேகர் , மாநிலச் செயலர் , P 4, FNPO 
A . ரகுபதி உமாசங்கர் , மாநிலச் செயலர் , ADMIN , NFPE 

2.      எதிர்வரும்  28.01.2014  செவ்வாயன்று சென்னை பெரு நகர்ப்பகுதியில் உள்ள கோட்ட/ கிளைகளின்  தோழர்களை ஒருங்கிணைத்து CPMG  அலுவலக  வளாகத்தில்  மதியம் 12.00 மணியளவில்  கோரிக்கைகளை வலியுறுத்தி JCA  சார்பாக உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் எனவும், 

      வேலை நிறுத்தத்திற்கான சம்மேளனங்கள்  21.01.14 அன்று அளிக்கும் நோட்டீஸ்  நகலை  CPMG  அவர்களுக்கு அனைத்து மாநிலச் செயலர்களும் கையெழுத்திட்டு அளிப்பது  எனவும் ,

        எதிர்வரும் 28.01.2014 அன்று அதே நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ சென்னை பெருநகர் நீங்கலாக ,  சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள இதர கோட்ட/ கிளைகள் மற்றும்  தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  கோரிக்கை ஆர்ப்பாட்டம்  நடத்திட வேண்டும் என்றும், 21.01.2014 இல் அளிக்கப்படும் சம்மேளன  வேலை நிறுத்த நோட்டீஸ் நகலை நிர்வாகத்திற்கு  அந்தந்த கோட்டங்களில் அளிப்பது  என்றும் தீர்மானிக்கப் பட்டது .

3.      சென்னை பெருநகர மண்டலத்தின்  வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் எதிர்வரும் 10.01.2014 திங்கள் அன்று மாலை 06.00 மணியளவில் JCA சார்பாக CPMG  அலுவலக வளாகத்தில் உள்ள MEETING HALL  அல்லது அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில்  நடத்துவது என்றும் இதில் அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொள்வது என்றும் முடிவு எடுக்கப் பட்டது .

4.    தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் அந்தந்த பகுதியில் உள்ள JCA வின் மாநிலச் சங்க/ அகில இந்திய சங்க/ சம்மேளன நிர்வாகிகளை அழைத்து சிறப்புக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும் , கோரிக்கைகளை விளக்கியும் , இதற்கான நோட்டீஸ் உம் அந்தந்த கிளைகளில் இருந்து தனித்தனியே  அனைத்து ஊழியர்களுக்கும் அளித்திட வேண்டும் என்றும்  தீர்மானிக்கப் பட்டது. இதன் நகல் மாநிலச் சங்கங்களுக்கு  அனுப்பப் படவேண்டும்  என்றும் கோரப் பட்டது.

5.   கோரிக்கைகள்  மற்றும் சிறப்புக் கூட்டங்கள் குறித்து  தமிழக JCA  சார்பில்   சுவரொட்டிகள்  மற்றும்  நோட்டீஸ்  வெளியிடுவது  என்றும் தீர்மானிக்கப்பட்டது .  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி கோரிக்கைகளை வென்றிட  அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது .

இந்த செய்திகளைத் தாங்கி  நோட்டீஸ்  கிடைப்பதில் தாமதம் ஏற்படின்  அதற்காக  உங்கள்  வேலைகளை  ஒத்தி வைத்திட வேண்டாம் என்றும் , இந்த வலைத்தள செய்தியை பார்த்த உடனே  இதற்கான ஏற்பாடுகளை உடன் செய்திட வேண்டும் எனவும்   தமிழக JCA  சார்பில் கோருகிறோம். இந்த செய்தியை பார்த்த  நிர்வாகிகள்  பார்க்காத  இதர நிர்வாகிகளுக்கு உடன்  தெரிவித்து செயலாற்றிட வேண்டும் என்றும்  வேண்டுகோள் அளிக்கிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன் 
J .  இராமமூர்த்தி , கன்வீனர் ,
அஞ்சல்  - RMS  -MMS- GDS  இணைப்புக் குழு , 
தமிழ் மாநிலம் .

No comments:

Post a Comment