NFPE

Wednesday 24 September 2014

Massive Dharna of JCA at Srirangam on 24.09.2014

   மத்திய JCA – வின் 6 கட்ட போராட்ட அறைகூவலின் இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா போராட்டம் NFPE கோட்டத்தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் தலைமையில்,  FNPO கோட்டச்செயலர் தோழியர் P. லலிதா அவர்கள் முன்னிலையில் காலை 10 மணியளவில் தொடங்கி மாலை 5 மணி வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. 50-க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் மற்றும் தோழியர்கள் முழு நேரமும் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தை சிறப்பித்தனர்.

   NFPE - ன் மத்திய மண்டலச்செயலர் தோழர் R. குமார் அவர்கள் கலந்துக்கொண்டு தர்ணா போராட்டத்தை சிறப்பித்தார்.  ஓய்வு பெற்ற தோழர்கள் திரு R. பாலசுப்ரமணியன் (முன்னாள் மத்திய மண்டலச் செயலர் NFPE-P3), திரு P. உத்தமன் முன்னாள் தலைவர் FNPO-P3 திருவரங்கம், திரு TPS திருச்சி மற்றும் திரு பசுபதி முன்னாள் ஓய்வுப்பெற்ற கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு தர்ணா போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள்.























NFPE, Srirangam

No comments:

Post a Comment