NFPE

Wednesday 15 October 2014

POST OFFICE IMPROVING BUSINESS WITHIN THEIR OWN EMPLOYEES !

'சொந்தக் காசில் சூனியம்' வைக்கலாமா ?

அஞ்சல் துறையின்  வியாபார யுக்தி  அபாரம் !
வணிகப் பெருக்கம் அமோகம் !
இனி எந்த ஒரு ஊழியரும் ஊதியமே வாங்க வேண்டாம் !
மாதம் 100 RD கணக்குகள்  அவரவர் பெயரிலேயே  துவக்குங்கள் ! 
ஆனால் மாதா மாதம் பணம் கட்ட வேண்டாம் ! 
PASS  BOOK போட வேண்டாம் !
( சும்மா கணக்கு எண்ணிக்கைக்குத் தானே !)

கிராமப் புற அஞ்சல் ஊழியர்கள்  வணிகப் பெருக்கம் என்ற 
பெயரில் கணக்குக் காட்ட  'பினாமி' யாக  RPLI  POLICY  உங்கள் பணத்திலேயே போடுங்கள் ! 

மாதா மாதம் PREMIUM  கட்ட வேண்டாம் ! 
ஆனால் மாதா மாதம் புதிது புதாதாக 'பினாமி ' பாலிசி போடுங்கள் ! 
பாலிசி எண்ணிக்கையை அதிகப் படுத்த வேண்டாமா ! 
கீழ் மட்ட அதிகாரிகள் உயர் மட்ட அதிகாரிகளிடம்  AWARD  வாங்க வேண்டாமா ! 

70%  பாலிசி க்கள்  இறந்து போனாலென்ன ?  
ஒவ்வொரு பாலிசி க்கும்  இலாகாவுக்கு  ரூ. 420/- செலவு ஆகிறதாம் ! 
ஆனால் நீங்கள் ரூ.15.00 க்கு WHOLE  LIFE  POLICY  ஆக மாதம்
100 பாலிசி போடுங்கள் ! வியாபார அபிவிருத்தி தானே ! 

ஒட்டு மொத்தத்தில் ரூ.15.00 வரவு ரூ. 420.00 செலவு . 
இது இலாக்கா ஆண்டு இறுதியில் கணக்கு எடுக்குமபோதுதானே 
தெரிய வரும் ! 

அது பற்றி நமக்கென்ன கவலை !
இருக்கவே இருக்கு இலாக்கா நட்டத்தில் இயங்குகிறது ! 
எல்லாரும்  BELT  ஐ இறுக்கிக் கட்டிக் கொள்ளுங்கள் என்ற கோஷம் !

உங்களுக்கு நீங்களே  'MY   STAMP' போட்டுக் கொள்ளுங்கள் ! வீட்டில் பெண்டாட்டி பிள்ளை குட்டிகளிடம் காட்டி பெருமை அடையுங்கள் !
வியாபாரம்  அபிவிருத்தி  அடைய வேண்டாமா ? 

நீங்களே PHILATELY  DEPOSIT  ACCOUNT உங்கள் பெயரிலேயே ஆரம்பித்துக் கொள்ளுங்கள் ! நீங்களே  வாங்கிய 
STAMP  ஐ கவுன்டரில் விற்றுக் கொள்ளுங்கள் ! 
வியாபார அபிவிருத்திதானே ? அமோகமாக  இலாக்காவுக்கு லாபமில்லையா ?

IMO பெருக வேண்டுமா ? உங்களுக்கு நீங்களே  MONEY  ORDER  BOOK   செய்யுங்கள் ! உடனடி பட்டுவாடா  என்று RECORD  செய்யுங்கள் ! பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுங்கள் ! 
எல்லாம் வியாபார அபிவிருத்தி அல்லவா ?

EPOST  'புடியுங்கள்' ! அல்லது உங்களுக்கு நீங்களே செலவு 
செய்து EPOST  அனுப்பி  அகமகிழ்ந்து கொள்ளுங்கள் !  

உங்கள் ஊதியப் பணத்தை குடும்பத்திற்கு ஏன் விரயம் செய்கிறீர்கள் ? இலாக்காவுக்கு லாபம் ஈட்ட இப்படியான உக்திகளை கையாளுங்கள் ! நிச்சயம்  லாபம் தான்  ! முடிந்தால் தனியார்  AGENCY  முறை மூலம் பெறும் பொருட்களை நீங்களே  வாங்கிக் கொள்ளுங்கள் !   

இப்படி தீவிரமாக BUSINESS  செய்துகொண்டிருக்கும் போது , 
பசி எடுத்தால்  நீங்கள் வெளியே சென்று  சாப்பிடாதீர்கள் ! 
உங்களுக்குள் நீங்களே   ஒருவரை ஒருவர் கடித்து  பசியாறுங்கள் !  அல்லது பசி எடுத்தால்  தன் சதையையே தானே 
கடித்து பசியாறுங்கள் !  பசி தீர்ந்து விடும் !
இலாகாவின் வணிகப் பசி இப்படித்தானே தன்  ஊழியரையே 
தான் கடித்து தன் பசி ஆறுகிறது ?

இவையெல்லாம்  வணிக வளர்ச்சி கூட்டங்களில் மேலதிகாரிகள் கீழதிகாரிகளுக்கு  அளித்திடும் INNOVATIVE  BUSINESS  
DEVELOPMENT  உக்திகளாகும்.  

இல்லையென்றால் , நாங்கள் மேல சொன்னவற்றையெல்லாம் கீழ் அதிகாரிகள் சுற்றறிக்கையாக , கிளை / துணை அஞ்சலகங்களுக்கு அனுப்புவார்களா ? அப்படி அனுப்பினார்கள் என்றால் , நிச்சயம் இவை மேலதிகாரிகள் அளித்த  ஆலோசனைகள் தானே ?   
வாழ்க அஞ்சல் துறை ! வளர்க வணிகப் பெருக்கம் ! 

இனி RECRUITMENT  NOTIFICATION  போடும்போது:

 'சொந்தக் காசில்  வணிகம் செய்து வியாபார அபிவிருத்தி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும் ' 
என்று  NOTIFICATION செய்தால்  நன்றாக இருக்கும் !. 
அல்லது 'சொந்தக் காசில் சூனியம்' வைத்துக் கொள்ள 
விருப்பமிருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்  என்று அறிவிக்கை செய்திடவும் !  இலாக்கா இப்படியே போனால்  நன்றாக வளரும் ! 
அதில் ஊதியம் பெறும்  நாமும்  வளர்ச்சியடைவோம் !

மேலே கண்ட விபரங்கள் எங்களால் ஏனோ தானோ என்று வேண்டா வெறுப்பில் சொல்லப் படவில்லை ! கண்டதைத்தான் சொல்லுகிறோம் ! 

 கீழே பார்க்க ஒரு உதாரணம் ! 
இது போல  பல கோட்டங்களில்  நடக்கிறது ! 
  
இதில் அதிகமாக  திருச்சி மற்றும்  மதுரை மண்டலங்களில் இருந்துதான்  நிறைய புகார்கள் 

உண்மையான அக்கறை உள்ள மேல் அதிகாரிகள்  
நிச்சயம் இருக்கிறார்கள் ! 

அவர்கள் பார்வைக்கு இந்த வலைத்தளம் மூலம் இது சென்றால் , அவர்களும் உடன்  இதன் மீது நடவடிக்கை எடுத்தால் ,   
REAL  BUSINESS  என்பதை நோக்கி  நாம் சென்றால் , 
நிச்சயம் இலாகா வளர்ச்சி பெறும் ! 
அந்த திசை நோக்கி  நாம் சிந்தித்தால்  அது  நமக்கும் , 
இலாக்காவுக்கும்  நிச்சயம் நல்லது! 

விமரிசனம் செய்வது மட்டும்  நம் நோக்கமாக இருக்க முடியாது !
இலாக்காவில்  ஊதியம் பெறும்  ஊழியர் என்ற வகையில் 'நமக்கு சோறிடும் கோவிலை இடிக்காதீர் ' என்று இடித்துரைக்கவும், உண்மையான வணிகம் புரிந்திடுங்கள் !என்று  வழி காட்டவும் 
நமக்கு கடமை இருக்கிறது !

மேலதிகாரிகள்  தலையிடுவார்களா ? பார்ப்போம் !

All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle 

No comments:

Post a Comment