அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே,
வணக்கம், மாநில சங்க அறைகூவலின்படி கடந்த 17.02.2015 அன்று திருவரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வரும் 24.02.2015 அன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம், நமது மத்திய சங்க அறைகூவலின்படி வரும் 27.02.2015 அன்று நடைபெறும்.
கடந்த 05.02.2015 அன்று டெல்லியில் கூடிய NFPE / FNPO மற்றும் GDS சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுப் போராட்டக் குழு நமது கோரிக்கைகளான 7வது ஊதியக் குழுவின் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும், 50% பஞ்சப்படியை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், இலாக்காவை ஆறு கூறாகப் பிரித்து , தனியார் மயம் செய்வதை கைவிட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாத சூழ்நிலையில் வரும் 06.05.2015 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது. கோரிக்கைகளை வென்றெடுக்க வரும் 27.02.2015 வெள்ளிகிழமை அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இடம்
மண்டல அலுவலக வளாகம், திருச்சி .
நாள் நேரம்
27.02.2015, வெள்ளிக் கிழமை மலை 06.00 மணி
நமது மாநில மற்றும் மத்திய சங்க கோரிக்கைகள் நிறைவேற, ஊழியர் பிரச்சனைகள் தீர இப்போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
போராடுவோம் வெற்றி பெறுவோம்!
வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!!
இறுதி வெற்றி நமதே!!!
NFPE, Srirangam


































