NFPE

Wednesday 30 December 2015

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாபெரும் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 

மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அறைகூவளுக்கிணங்க இன்று (30.12.2015) மாலை 1730 மணியளவில், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் ML. இர்பான் அலி  (வருமான வரித்துறை) தலைமையில், மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநில அமைப்புச் செயலர் தோழர் K. மருதநாயகம் (Divl. Sec, NFPE P3, Trichy)  முன்னிலையில் திருச்சி தலைமை அஞ்சலகத்தின் முன் 7-வது ஊதியக் குழுவின் மோசமான பரிந்துரைகளை கண்டித்து முதல் கட்டமாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் செயலர் தோழர் T. குணசேகரன் (Divl. Sec, NFPE R3, Trichy), திருச்சி மாவட்ட மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் பொருளாளர் தோழர் C. சசிகுமார் (Divl.Sec, NFPE P3, Srirangam), திருச்சி மாவட்ட  மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் முன்னாள் செயலர் தோழர்  செல்வன், தோழர் கோவிந்தராஜன் (Divl. Sec P4, Trichy) மற்றும் முன்னணி தோழர்கள் சிறப்புறையாற்றினார்கள்.  இந்த ஆர்ப்பாட்டத்தில்  மத்திய அரசின் அனைத்து  துறைகளைச் சார்ந்த ஊழியர்களும் கலந்துக்கொண்டனர்.
  



No comments:

Post a Comment