NFPE

Wednesday 27 March 2013


நம்முடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திருவரங்கக் கோட்டத்தின்  அஞ்சல் கண்காணிப்பாளர் திரு S. பாஸ்கரன் அவர்கள் 27.03.2013 அன்று  நம்மிடம் இருந்து பிரியா விடைபெற்று, திருச்சி மண்டல அலுவலகத்தில் AD (Mails) ஆக பதவி ஏற்க உள்ளார். அங்கேயும் அவர் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

பழகுதற்கு இனியவர்
பண்பில் நல்லவர்
பார்வையில் கனிவு
தோற்றத்தில் எளிமை
பேச்சினில் அன்பு
மூச்சினில் அஞ்சல்துறை
இத்தகு பெருமைமிக்கவர் – எமது
கோட்டக் கண்காணிப்பாளர்
அய்யா, திரு பாஸ்கரன் அவர்கள்!
 

தன்னலம் பாராது
எந்நாளும் ஊழியர்
நலம் விரும்பி
ஓயாது உழைக்கும்
உழைப்புச் செம்மல்!
 

Project Arrow எனும்
அன்று உதித்த புதிய திட்டத்தில்
அயராது பாடுபட்டு அதன் பலனாய்
தாய்லாந்து சென்று  - நம்
தாயகத்துக்கு பெருமை சேர்த்தவர்!
 

ஆலமரமான அஞ்சல்துறையின்
ஆணிவேரான RPLI ல்
இந்தியாவிலேயே முதல்வனாய் நின்ற
ஈடில்லா தலைவர் நீவீர்!
 

தாயைவிட்டுப் பிரியும்
சேய்போல் யாம் தவித்தாலும்
என்றென்றும் எங்கள் மனத்தாமரையில்
நீங்கா இடம்பெற்ற
நீவீர் வாழிய பல்லாண்டு!
    






 
 


NFPE, Srirangam

No comments:

Post a Comment