NFPE

Monday 3 August 2015

மேதகு கலாமுக்கு ஒரு கவிதாஞ்சலி

சலாம் எங்கள் மேதகு கலாம்

நன்னெறியில்  நபிகளாய்,
உபதேசங்களில் கண்ணனாய்,
நல்வழிப் படுத்தலில் ஏசுபிரானாய்,
போதனைகளில் புத்தராய்,
கருணையில் வள்ளலாராய்,
மாணவ சமுதாயத்தின் நல்லாசானாய் ,
பாரதத் தாயின் தவப் புதல்வனாய்,
எந்நாட்டவரும் போற்றும் மாமனிதராய்

வியத்தகு விஞ்ஞானியாய்,
வாழ்வாங்கு வாழ்ந்து இவ்வையகத்தாற்கு,
வழி  காட்டிய மெய்ஞானியே,
மண்ணுலகிலிருந்து கொண்டு விண்ணுலகை ஆண்ட
விஞ்ஞானியே! மெய்ஞானியே!
*** கலாம் ***
எக்காலமும் எல்லோராலும்
மதித்துணரப்பட்ட நீ மனிதர் அல்ல,
மாமேதை அல்ல,
அதையும் தாண்டி மகான்,
ஒரு அவதாரபுருஷன்,
சரித்திர நாயகன். 
R. Padmapriya
PA, Srirangam HO







No comments:

Post a Comment