NFPE

Thursday 31 May 2012


 Greetings to our General Secretary
Comrade K.V.Sridharan AIPEU (P3)


வாழ்த்து மடல்

v  குடியரசு நாளன்று

அரங்கனின் அருளகத்தில்

எங்கள் கேள்விகளுக்கு விடையாய் நின்ற

திரு. கே.வி.எஸ். அவர்களே!
 

v  அகவை அறுபதை எட்டியதால்

அரசு அளிக்கும் அன்புப்பரிசு

Super Annuation”

அனால்!

அரசு  அறியவில்லை

அன்னார் “மற்றோர் மார்க்கண்டேயர்” என்று.
 

v  நல்லதோர் வழிகாட்டி நீவிர் – பணம்

இல்லாதோராய் நின்ற அஞ்சல்

பணியாளர்க்கு ஐ.டி துறைக்கு

இணையாய் ஊதியம் ஈட்டித்தந்தீர்!



v  அறிவுஜீவித் தோழர் என்று

அன்பால் விளிக்கப்படுபவரே !

“பணி ஓய்வு” உம் அகவைக்குத் தான்

ஓயாத உம் பணிக்கு அன்று !    
 

v  இருளில் ஒளிரும் நட்சத்திரம்

இவ்வுலகில் யாவரும் கண்டோம் !

இந்தியா போஸ்ட் வானில் –நீர்

என்றென்றும் ஒளிரும் Super Star ”!


v  கனிவான பேச்சு !

துணிவான செயல்திறன்!

அஞ்சாத நெஞ்சம்! – விண்ணை

விஞ்சும் முற்போக்குச்சிந்தனை !

தொய்வில்லா  பணி

ஓய்வில்லா உழைப்பு !

வள்ளுவன் சொல்லின்

வாழ்வியல் உதாரண புருஷர் !
 

v  பரமன் அருளினால்

மணிவிழா காணும் – எம்

மனம் நின்ற தலைவா நீர் !

நீடிய ஆயுளும்

நிறைந்த செல்வமும்

குறைவிலா ஆரோக்யமும்

நிறைவுற பெற்று

நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறோம் !

                          NFPE, Srirangam

No comments:

Post a Comment