NFPE

Thursday 19 March 2015

திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டம்

  திருவரங்கம் தலைமை அஞ்சலகத்தில் இன்று மாலை 06.30 மணியளவில் நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க கூட்டத்திற்கு திருவரங்கம் அஞ்சல் நான்கின் கோட்டச் செயலர் தோழர் R. சந்திரன் அவர்கள் தலைமை தாங்கி மிகச் சிறப்பாக நடத்தி கொடுத்தார்.  திருவரங்கம் அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர் C. சசிகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.  மாநிலச் சங்க நிர்வாகிகள் தோழர் J. ஜானகிராமன், மாநில உதவித் தலைவர் அஞ்சல் மூன்று, தோழர் S. குமரன், மாநில உதவிச் செயலர் அஞ்சல் நான்கு, தோழர் R. விஷ்ணுதேவன், மாநில நிதிச்செயலர், NFPE GDS, மற்றும் தோழர் P. பன்னீர் செல்வம், மாநில அமைப்புச் செயலர், NFPE GDS ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு "இன்றைய காலத்தில் வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவத்தை" மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்கள்.

  வேலை நிறுத்த விளக்க கூட்டத்தில் சுமார் 50-க்கும் அதிகமான தோழர்களும், தோழியர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
















NFPE, Srirangam

No comments:

Post a Comment