NFPE

Thursday 14 January 2016

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

" பொங்கலோ பொங்கல்"

புதுப் பானையில் வண்ணக் கோலமிட்டு 
புத்தம்புது அரிசியை 
தளதளவென கொதிக்கும் பால்நீரில் 
தரணிக்கு ஒளிதரும் 
ஆதவனை எண்ணி அள்ளிப்போடும் அழகு!
பொங்கி வருகையில் மங்கலப் பெண்டிரின் 
குலவையோசையில் " பொங்கலோ பொங்கல்"

பழமை - பொருள் மட்டுமல்ல 
எண்ணங்களையும் தீயிலிடுவோம் 
புதுமைகளை திலகமிட்டு வரவேற்போம் 
பதுமைகளாய் மாதரை காண்போரை 
பரிகாசம் செய்து இகழ்ந்திடுவோம்!
சுகபோகங்களை போகி செய்து 
எளிமையை இனிமையாக்கும் 
" பொங்கலோ பொங்கல்"

உழவுக்கு நன்றி சொல்லும்                       
உன்னத திருநாள் 
ஏறு பூட்டும் விவசாயிக்கு 
ஏற்றம் தரும் நன்னாள்!
மாறுபட்ட சிந்தனைகள் 
மனதில் உதிக்கும் பொன்னாள் 
பாடுபட்டு உழைப்போரின் பசிபோக்கும் 
" பொங்கலோ பொங்கல்"

வாழிய    செந்தமிழ்!
வாழிய     தமிழர் ! 

NFPE, Srirangam

No comments:

Post a Comment