NFPE

Tuesday 19 April 2016

நூறு இளைஞர்கள் இருந்தால்
புதிய பாரதம் படைப்பேன் என்றார்
வீரத் துறவி விவேகானந்தர்!

இளையோர் இருந்தோம்
விவேகானந்தரைத் தேடி....
கண்டோம் அவரை – எம்
கண்காணிப்பாளர் திரு. மைக்கேல்ராஜ் வடிவில்!

பாராட்டு என்பதை – யாம்
பணிக்கு வந்தபின்
ஏட்டளவில் மட்டும் கண்டோம் – இன்று
எளிமையான தமிழில்
நேருக்கு நேர்
அவையில் முன்னிறுத்தி
அதிகாரியின் அதரங்கள் வாயிலாய்
செவிக்கு இனிமையாய்
சிந்தைக்கு பகுமானமாய்
செய்த பணிக்கு வெகுமதியாய்
நிறைவான இந்நாள் (13.04.2016) – நம்
ஸ்ரீரங்க கோட்டத்தின்
மறக்கவியலா பொன்னாள்!

ஐயா!
உம் எண்ணத்தில் உதிப்பதை
எம் கைவண்ணத்தில் முடிப்போம்!
உமது கண்கள் சொல்வதை
எமது கைகள் முடிக்கும்!
நாட்டின் பொருளியல் ஓங்க
நாம் அனைவரும் கைகோர்ப்போம்!
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமாய் – நம்
கோட்டத்தை உயர்த்துவோம்!
செங்கோட்டையில் நம் துறை உயர
கடமை உணர்ச்சியோடு
களம் இறங்குவோம்!
வெற்றி பெறுவோம்!

நன்றி ! ஜெய்ஹிந்த் !


                                     சுபஸ்ரீ , ரெங்கநகர் 

No comments:

Post a Comment