NFPE

Tuesday 5 November 2013

STUDY CAMP AND BI- MONTHLY MEETINGS OF CENTRAL REGION

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

மத்திய மண்டல கோட்ட/ கிளைச் செயலர்கள் கூட்டம்: 

எதிர் வரும் 09.11.2013 அன்று மத்திய மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களின் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற உள்ளது .இது குறித்து ஏற்கனவே அறிவிப்பும் , தற்போது மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும் அனைவருக்கும் அனுப்பப் பட்டுள்ளது. எனவே மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தவறாமல் கலந்து கொண்டு அவரவர் பகுதிப் பிரச்சினைகளை மாநிலச் சங்கத்திடம் அளிக்கவும்.
மத்திய மண்டல தொழிற்சங்க பயிலரங்கு:

 எதிர்வரும் 10.11.2013 அன்று மத்திய மண்டலத்தில் தொழிற்சங்க பயிலரங்கு பெரம்பலூரில் நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பும் அதற்கான மாநிலச் சங்கத்தின் சுற்றறிக்கையும் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. எனவே மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் தங்கள் பகுதியில் இருந்து பெருமளவில் சங்க முன்னோடிகளையும் இளைஞர்களையும் கலந்து கொண்டு பயன் பெறச் செய்திட வேண்டுகிறோம். இலாக்கா விதிகள் குறித்தும் , தொழிற்சங்க வரலாறு , குறித்தும், இலாகாவின் எதிர்காலம் குறித்தும் வகுப்புகள் எடுக்கப் படவுள்ளதால் , அஞ்சல் நான்கின் செயலர்களும், நிர்வாகிகளும் , GDS சங்க செயலர்களும் கூட இந்த பயிலரங்கிற்கு நமது அஞ்சல் மூன்று செயலர்கள் அழைத்து வரலாம் . அவர்களுக்கும் இது ஒரு பயிற்சி பட்டறையாக நிச்சயம் அமையும் என்பது திண்ணம் .
மத்திய மண்டலPMG உடன் இருமாதங்களுக்கு ஒரு முறையான பேட்டி

மத்திய மண்டலத்தின்
BI-MONTHLY MEETING எதிர் வரும் 18.11.2013 அன்று நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளை மாநில/ மண்டலச் செயலரிடம் எதிர்வரும் 08.11.2013 க்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட வேண்டப் படுகிறார்கள் .

மாநிலச் செயலர் ,
அஞ்சல் மூன்று ,
தமிழ் மாநிலம்.

No comments:

Post a Comment