NFPE

Saturday 6 October 2012

BI-LATERAL DISCUSSIONS ON STRIKE BY CPMG WITH JCA LEADERS



தொழிலாளர் நல ஆணையர் உத்திரவுப்படி 05.10.2012 மாலை 03.30 மணியளவில் CPMG TN அவர்களால் அதிகாரபூர்வமான பேச்சு வார்த்தைக்கு வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்த JCA தலைவர்கள் அழைக்கப் பட்டனர். NFPE/FNPO சார்பில் 13 மாநிலச் செயலர்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர் . மதுரை அஞ்சல் பயிற்சி மைய இயக்குனரின் அடாவடித்தனங்கள் குறித்தும் , பயிலாளர்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது.

மேலும் தோழர் ஜெயகுமாரின் தற்கொலைக்கு பயிற்சி மைய இயக்குனரின் கொடுமைகளே காரணம் என்பதையும் விரிவாகத் தெரிவித்தோம் . அதே போல தென் மண்டல இயக்குனரின் அத்து மீறிய செயல்களையும் , இந்த தற்கொலையில் அவரின் வரம்பு மீறிய செயல்களையும் , உண்மைகளை மறைத்து , அஞ்சல் மைய இயக்குனருக்கு ஆதரவாக அவர் செயல் படும் தவறான விதம் குறித்தும் விரிவாகத் தெரிவிக்கப் பட்டது. இவை அனைத்தையும் CPMG அவர்கள் பொறுமையாகக் கேட்டறிந்தார். பல்வேறு கேள்விகளை கேட்டும் அதன் மீது விளக்கங்களையும் பெற்றார். கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் இந்த விவாதம் நடைபெற்றது.

இறுதியாக நம்முடைய வேலை நிறுத்தத்திற்கான மூன்று கோரிக்கைகளையும் உடன் நிறைவேற்ற வேண்டுமென நாம் வேண்டினோம்

அதற்கு CPMG TN அவர்கள் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தார்.

1. PTC, MADURAI இல் நடக்கும் விதிகளை மீறிய தவறான ( EXCESS ) நடவடிக்கைகள் நிறுத்தப் படுவதற்கு உடன் ஆவன செய்யப் படும்.

2. பாதிக்கப் பட்ட ஊழியர்கள் , அவர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதி குறித்து உரிய புகார் CPMG க்கு , நேரிலோ அல்லது விரைவு/ பதிவுத் தபாலிலோ தெரிவிக்கப் பட்டால் , விசாரித்து ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

3. மேலும் இவை குறித்து PTC இயக்குனர் மற்றும் தென் ,மண்டல இயக்குனர் ஆகியோரிடம் அவரே நேரில் சென்று விசாரித்து ஆவன நடவடிக்கை மேற்கொள்வார் .

4. PTC இயக்குனர் DIRECTORATE இன் நேரடி CONTROL இல் உள்ளதால் அவரை உடனே இடமாற்றம் செய்திட அல்லது இடை நீக்கம் செய்திட இயலாது.

5. தோழர். ஜெயகுமாரின் தற்கொலை குறித்தும் , PTC, DIRECTOR மற்றும் தென் மண்டல இயக்குனரின் அத்து மீறிய செயல்கள் குறித்தும் மாநில நிர்வாகத்தால் சென்னையில் நடைபெறும் வண்ணம் உரிய உடனடி விசராணைக்கு உத்திரவிடப்படும்.

6. இது குறித்து உரிய ஆதாரங்களுடன் எந்த ஒரு ஊழியரும் , அல்லது உறவினரும் தபாலிலோ அல்லது நேரிலோ புகாரை அவருக்கு அளிக்கலாம். அதன் ரகசியங்கள் காக்கப் படும்.

7. விசாரணை குறுகிய கால அவகாசத்தில் 15.10.2012 க்குள் முடிக்கப் பட்டு , அதன் மீது இரகசிய விசாரணை அறிக்கை டெல்லிக்கு அனுப்பப் பட்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

8. விசாரணை காலத்தில் INDUCTION TRAINING மற்றும் நடப்பில் உள்ள பயிற்சி தவிர , வேறு எந்த MID CAREER TRAINING ம் நடத்தப் படாது.

9. மீண்டும் 16.10.2012 இல் இது குறித்து அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கும் ஊழியர் தரப்பிருக்கு அழைப்பு விடுக்கப் படும்.

இந்த பதிலின் மீது நமக்கு முழு உடன் பாடு ஏற்படாததாலும் , இதற்குரிய RECORDED MINUTES திங்களன்று இறுதி செய்யப்படுவதாலும் இதன் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து JCA கூடி திங்களன்று முடிவு எடுப்பதாக அறிவிக்கப் பட்டது.

கோட்ட/கிளைச் செயலர்களுக்கு/ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

CPMG, TN அவர்களால் அறிவிக்கப் பட்டுள்ள உயர் மட்ட விசாரணைக்கு உங்கள் பாதிப்புகள் ஏதும் இருப்பின் உடன் நேரடி புகார் மனுவை திருமதி. ஹில்டா ஆபிரகாம் , IPS, CHIEF POSTMASTER GENERAL, TN CIRCLE,

CHENNAI 600 002 என்று பெயரிட்டு விரைவுத் தபாலிலோ அல்லது பதிவு தபாலிலோ உடன் அனுப்பிட வேண்டுகிறோம்.



இது போல தோழர். ஜெயகுமாரின் தற்கொலை குறித்து எவருக்கு உரிய விபரம் தெரிந்தாலும் CHIEF PMG, TN அவர்களுக்கு நேரிலோ அல்லது விரைவுத் தபாலிலோ அல்லது பதிவுத் தபாலிலோ விரிவாக எழுதி கையெழுத்திட்டு அளிக்கவும்/ அனுப்பவும். உங்கள் விபரங்கள் கண்டிப்பாக CHIEF PMG TN அவர்களால் பாதுகாக்கப் படும்.


உடன் செயல் படுங்கள் ! கால தாமதம் உரிய நீதியைக் கொடுக்காது !
பயம் நீதியை தூக்கில் தொங்க விடும் !
விதைக்கும் காலத்தில் தூங்கிப் போனால் அறுக்கும் காலத்தில் எதுவும் இருக்காது !

Friday, October 5, 2012



CONCILIATORY TALKS BEFORE LABOUR COMMISSIONER

05.10.2012 அன்று காலை 11.00 மணியளவில் சென்னை மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் தமிழக JCA சார்பில் அளிக்கப்பட வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் நிர்வாகத்தின் சார்பில் திரு . M. நாச்சிமுத்து , AD SR அவர்களும் ஊழியர் தரப்பில் 13 மாநிலச் செயலர்களும் கலந்து கொண்டார்கள்.

நிர்வாகத் தரப்பில் CPMG TN அவர்கள் கலந்துகொள்ளாமல் ASST. DIRECTOR ஒருவரை அனுப்பியது சட்ட விதிகளுக்கு முரணானது என்பதை தொழிலாளர் நல ஆணையர் சுட்டிக் காட்டி எச்சரித்தார் . ஊழியர் தரப்பில் அளிக்கப்பட ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு , அதன் மீதான விபரங்களை பொறுமையாக கேட்டறிந்தார். நாம் வைத்த குற்றச் சாட்டுகளுக்கு நிர்வாகத் தரப்பில் பதில் ஏதும் சரிவர அளித்திட இயலவில்லை .

இதனை சுட்டிக் காட்டி , தொழிலாளர் நல ஆணையர் அவர்கள் , உடனடியாக CPMG TN அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினை தீர்க்கப் படவேண்டும் என்று நிர்வாகத்திற்கு உத்திரவிட்டார் . பேச்சு வார்த்தையின் முடிவுகளை உடன் தமக்கு தெரிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார் . அதனடிப்படையில் அடுத்த கட்ட பேச்சு வார்த்தைக்கு தேதி தெரிவிக்கப் படும் என்றும் பதிவு செய்யப் பட்டது

இது சம்பந்தமாக தொழிலாளர் நல ஆணையர் முன் கையொப்பமிடப்பட்ட MINUTES COPY கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கப் பட்டுள்ளது .

No comments:

Post a Comment